தையல் கலையின் வளர்ச்சி, நேற்று, இன்று, நாளை.


தையல் கலை - நேற்று:

          தையல் என்றால் பெண் என்று பொருள். ஆகவே எல்லா பெண்களும் குறிப்பாக வளரிளம் பருவப் பெண்களும், தையல் கற்றுக் கொள்ள வேண்டும். பண்டைக் காலம் முதல் மனிதன் தனது ஆடையை ஊசியன் துணைக் கொண்டு கையினால் தைத்தான். அது காலப்போக்கில், விஞ்ஞான வளர்சிக்கு ஏற்ப கைத் தையல், மெஷின் தையலாக மாற்றம் பெற்றது.

தையல் கலையின் வேகமான வளர்ச்சி:

          கடந்த 160 வருடத்தில் தையல் மெஷின் வந்ததால் தையல் வேலை குறிப்பாக துணிகள் தைப்பது என்ற வேலை சுலபமானது. துணிகள் தைக்கும் வேகம் அதிகரித்தது. விளைவு, தையல் மெஷினில் தைத்து துணிகளின் விற்பனை வேகம் அதிகரித்தது.

தையல் கலை - இன்று:

          இன்று தையல் கலை, தையல் தொழிலாக மாற்றம் பெற்று இலட்சக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு  அளிக்கும் கற்பகதருவதாக மாறி உள்ளது. வளரிளம் பெண்களின் கற்பனை வளத்திற்கு ஓர் மிகப் பெரிய வடிகால் தையல் கலை, வீட்டில் இருக்கும் பெண்களுக்கு, ஓரு ஆரோக்கிய பொழுதுபோக்கு தையல்கலை என்று சொன்னால் மிகையாகது.

திடீர் உடை அல்லது ரெடிமேட் உலகம்:

          இந்த 21 ஆம் நூற்றாண்டில், விஞ்ஞானம் முன்னேற்றம் அடைந்த காலத்தில், திடீர் இட்லி, திடீர் சாம்பார், திடீர் குலோப்ஜான், திடீர் உடை அல்லது ரெடிமேட் உலகம் என்று உலகம் மாறிவிட்ட கால கட்டத்தில், யார் சார் வரும் காலத்தில் துணியைத் தைக்கப் போகிறார்கள்? துணி தைக்கும் கலைக்கு, துணி தைக்கும் தொழிலுக்கு எதிர்காலம் உண்டா? வளரிளம் பருவப் பெண்களான நாங்கள், இந்த கம்பியூட்டர் யுகத்தில் தையல் கலையைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமா? என்று பல்வேறு சந்தேகங்கள் வளரிளம் பருவத்தில், டீவி, இன்டர்நெட் உலகில் மூழ்கி உள்ள உங்கள் மனதில் எழும்.

தையல் கலை - நாளை:

          என்னுடைய தெளிவான தீர்க்க தரசினமான பதில் என்னவென்றால், இன்னும் ஆயரம் ஆண்டுகள் ஆனாலும் இந்த தையற்கலைக்கு அழிவில்லை. மூன்றாம் பகுதியில் பார்த்தது போல், இன்று கம்பியூட்டர் துணை கொண்டு தானாக மெஷின் எம்ராய்டரி செய்யும் அளவுக்கு தையல் கலை விஞ்ஞானம் முன்னேறிவிட்டது. எத்தனை கம்பியூட்டர் வந்தாலும் உடை என்ற ஒன்று இந்த உலகில் மனிதன் உருக்க இருக்கும் வரை, தையல் கலை இந்த மண் உலகில் இருக்கும்.

தையல் கலை - ஆயிரம் காலத்துப் பயிர்:

          திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று சொல்வார்கள். அதேபோல், பெண்களைப் பொருத்தவரை தையற்கலை என்பது ஆயரம் காலத்து பயிர்.

தையல்கலை ஆக்கபூர்வ பொழுது போக்கு:

          ஒவ்வொரு பெண்ணும் குறிப்பாக வளரிளம் பெண்ணும், வளரிளம் பருவக் காலத்தில், தனுது பொழுது போக்கு நேரத்தை இந்த தையற்கலைக்கு செலவு செய்தால், அதற்கு பிரதிபலனாக பலமடங்கு பலனை, வாழ்நாள் முழுவதும் அடையலாம். தையல் கலை, ஒரு ஆக்கபூர்வமான பொழுதுபோக்கு. மேலும் தையல் கலை வளரிளம்  பருவப் பெண்ணின் ஆரோக்கிய  வாழ்க்கைக்கு அடித்தளமிடும் கலை.

உடற்பயிற்சி  இன்மை....உள்ளப் பயிற்சி இன்மை:

          இன்றைய சுகந்திரமயமான  விஞ்ஞான முன்னேற்ற உலகத்தில்   இன்றைய பெண்கள் பலப்பல இயந்திரத்திற்கு அடிமையாகி, உடற் பயிற்சி இன்றி, உள்ளப் பயிற்சி இன்றி, தவறான உணவு பழக்கத்துக்கு அடிமையாகி, தொலைக்காட்சி நிகழ்சிகளுக்கு இல்லை, இல்லை... தொல்லைகாட்சி நிகழ்சிகளுக்கு அடிமையாகி நேரத்தை ஆக்க வழியில் செலவு செய்யமால், உடலையும் மற்றும் உள்ளதையும் போட்டி போட்டுக்கொண்டு, தான் செய்வதன் விளைவு அறியாது பாழ்படுத்தி கொள்கிறார்கள்.

விடுதலை:

          நமது முன்னோர்கள் பெண் விடுதலை பற்றி பல்வேறு வகையில் கருத்து வெளியிட்டுள்ளார்கள். உண்மையான பெண் விடுதலை என்பது உடலும், உள்ளமும் இயந்திர மயமாக்கப்பட்ட இந்த காலகட்டத்தில், இயந்திர ரீதியாக வாழ்க்கையை, வாழாமல் பகுத்தறிவின் துணை கொண்டு, உடல் ஆரோக்கியத்தோடு, உள்ள ஆரோக்கியத்தோடு உயரிய வாழ்க்கைக்கு, தையல் கலை ஒரு வளரிளம் பருவப் பெண்ணுக்கு பேருதவியாக அமையும்.

உயரிய எண்ணம்:
          இத்தகைய உயரிய 'விடுதலை' வாழ்க்கையை ஒவ்வொரு வளரிளம் பருவப் பெண்ணும் வாழ, நமது தேச பிதா மகாத்மா காந்தி அடிகள் ஒரு வழிமுறையை காட்டுகிறார். அந்த வாழ்க்கை முறைகயை "எளிமையான வாழ்க்கை, உயரிய எண்ணம்" (Simple living & High Thinking) என்று குறிப்பிட்டார்.

எளிமையான வாழ்க்கை:

          ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் வசதி வாய்ப்பு இல்லாவிட்டாலும், தியாக மனப்பான்மையோடு, இந்திய நாட்டின் பாதுகாப்பான வளர்ச்சியை கருத்தில் கொண்டு எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும், அதே நேரத்தில் நாடு முன்னேற வேண்டும், வேகமாக முன்னேற வேண்டும் என்ற உயரிய எண்ணத்தை தினம், தினம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று மகாத்மா காந்தி அடிகள் கேட்டுக்கொண்டார்.

கிராம முன்னேற்றமே இந்திய முன்னேற்றம்:

          இந்திய மக்கள் தொகையில் 70 சதவித மக்கள் கிராமங்களில் வசிக்கிறார்கள். ஆகவே, நமது கிராமங்கள் முன்னேற்றம் அடைந்தால் தான், இந்தியா பொருளாதார முன்னேற்றம் அடைய முடியும் என்று காந்தி அடிகள் தெளிவாகக் கனவு கண்டார். இந்தியர் ஒவ்வொருவரும் சுதந்திர இந்தியாவில் செய்ய வேண்டிய கடமைகளாக காந்தி அடிகள் கிராம முன்னேற்றத்தைக் குறிப்பிட்டார்.


இராட்டை:

         மேலும், காந்தி அடிகள் ஆங்கிலேயரால் இயந்திரம் அல்லது மேஷின்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட துணிகளை புறக்கணிக்க செய்துஇராட்டை மூலம் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும், தன் கையே தனக்கு உதவி என்ற வகையில் தனக்கு தேவையான துணிகளை தானே உற்பத்தி செய்ய இந்திய மக்களை பழகச் சொன்னார்.

வெள்ளையனே வெளியேறு :

         இந்த சிறிய காந்திஜியின் சிந்தனை பொறி, பெரிய அளவில், 'வெள்ளையனே வெளியேறு ' என்ற இயக்கமாக 1942 ஆம் ஆண்டு மாறி, 1947 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், 15 ஆம் நாளில் இந்தியா சுதந்திரம் பெற மிகப் பெரிய அடித்தளமாக அமைந்தது

         சுருங்க சொன்னால், காந்திஜியின் உடையைப் பற்றிய சிந்தனை, குறிப்பாக உடைக்கான துணியை இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்ற மாறுபட்ட சிந்தனையே இநதிய வரலாற்றில் ஒரு மைல்கல்லாக சுதந்திர இந்தியாவின் அடித்தளமாக அமைந்தது.

தையற்கலையின் எதிர்காலம் :

          சார், இந்த பழைய கதைகள் எல்லாம் எங்களுக்கு வேண்டாம்.
          இன்றைய விரைவான சூழலில், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற காலக்கட்டத்தில் உள்ள எங்களுக்கு தையற்கலை அவசியம் தானா?
          அதுவும் வளரிளம் பருவப் பெண்களுக்கு இந்த காலக்கட்டத்தில் தையல் கலை அவசியம் தானா?
          இந்த தையல் கலையை கற்றுக் கொண்டு நான் நாலு காசு அல்லது நாலு ரூபாய் பார்க்க முடியுமா?
          இன்றைய வேகமாக மாறி வரும் "திடீர் உடை" (ரெடிமேட்) சூழலில் தையல் கலைக்கு எதிர்காலம் உள்ளதா? என்பதுதானே உங்களுடைய மனச் சந்தேகங்கள்.

90 கோடி பெண்கள் துணி தேவை :

         ஏற்கனவே இந்தப் புத்தகத்தின் முதல் பகுதியில் கோடிட்டு காட்டி உள்ளபடி, தமிழகத்தில் உள்ள பெண்களின் எண்ணக்கை சுமார் 3 கோடி. இந்தப் பெண்களுக்குக் குறைந்துது 4 முதல் 5 துணிகள் தினம், தினம் உடுத்தவேண்டும். அது சுடிதார் டாப்பாக இருக்கலாம், சுடிதார் பேண்டாக இருக்கலாம்,ஜாக்கெட்டாக இருக்கலாம், பெட்டிகோட்டாக இருக்கலாம். குறைந்தது 5 செட் தேவை இருப்பில், 15 கோடி பெண்கள் துணி தினம் தேவை, 5 செட், ஆக மொத்தம் 90 கோடி பெண்கள் துணிகள் வடிவமைக்க வேண்டும்.
 
இரண்டு லட்சம் தையல் கலை நிபுணர்கள் :

          இன்று தமிழகம் முழுவதும், அதிக பட்சமாக இரண்டு லட்சம் முழு நேர தையல் கலை நிபுணர்கள் இருக்கிறார்கள். இவர்களில் ஒரு லட்சம் பேர், திருப்பூர், சென்னை , கோவை, திருநெல்வேலி, திருச்சி போன்ற பெரிய நகரங்களில் பெரிய தொழிற்ச்சாலைகளில் பணியாற்றுகிறார்கள்.
          தமிழகத்தில் அத்தகைய ஒரு லட்சம் நபர்களை தவிர்த்தால், மீதம் உள்ள ஒரு லட்சம் தையல் கலை நிபுணர்கள்தான், இன்றைக்கு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஊர்களிலும் இவர்கள் பரந்து விரிந்து உள்ளனர். இந்த ஒரு லட்சம் தையல் கலை நிபுணர்களில், பெண்கள் ஆடைகளை வடிவமைப்பவர்கள் எண்ணக்கை சுமார் 40 ,௦௦௦ பேர் தான்.

இரண்டு மாத டெலிவரி :

         இன்றைய நிலையில், குறிப்பாக பெண்கள் தையல் கலை நிபுணர்கள் தேவை ஒரு லட்சத்திற்கு மேல் தமிழகத்தில் மட்டும் உள்ளது. நீங்கள் கூட உங்கள் துணியைத் தைய்க்கக் கொடுக்கும் போது ஒரு நிகழ்வைப் பார்க்கலாம்.
         குறைந்த பட்சம் இரண்டு வாரம் முதல் ஒரு மாதம் வரை, பல சமையம் நீங்கள் கேட்கும் டிசைன் மற்றும் வேலைப்பாட்டுக்கு ஏற்ப ஒன்று அல்லது இரண்டு மாதம் கழித்து உங்கள் தைத்த வடிவமைக்கப்பட்ட துணி டெலிவரியாக கிடைக்கும். மேலும், கூர்ந்து கவனித்தால் ஒரு உண்மை புலப்படும். அந்த தையல் வடிவமைப்பாளர், இரவு, பகல் என்று எப்பொழுதும் தைத்து கொண்டே இருப்பார். அப்படி இருந்தும் ஒரு வாரம் முதல் இரு மாதம் வரை என்று துணிகள் வெயிட்ங் லிஸ்ட் அவரிடம் இருக்கும்.



மூன்று மாத டெலிவரி:

         தீபாவளி சீசன் என்றல் கேட்கவே வேண்டாம், 3 மாதம் முன்னாலேயே துணி வாங்குவதை அந்த தையல் கலை நிபுணர் நிறுத்திவிடுவார். குறைந்த பட்சம் ஒரு லட்சம் தையல் கலைஞர்கள் உடனடியாக தமிழகத்தில் பெண்கள் உடையை மட்டும் வடிவமைக்கத் தேவை.
         பெண்கள் உடையை வடிவமைத்துத் தைக்க, தையல் கலைக்கு உள்ள சந்தை வாய்ப்பை புரிந்துகொள்ள ஒரு நிகழ்ச்சியை நான் அடுத்த பகுதியில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
         தையல் கலையில் நாலு காசு இல்லை... நாலு ரூபாய் இல்லை... நாலு லட்சம் ரூபாய் முதல் நாள் கோடி ரூபாய் வரை பணம் சம்பாதிக்க வைப்புகள் உங்கள் ஊரிலேயே உள்ளது.
         தின ரூபாய் 500 முதல் 1000 வரை ஒரு வளரிளம் பருவப் பெண் வீட்டில் இருந்தபடியே, தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும், எத்தகைய வசதி வாய்ப்பு இருந்தாலும் சம்பாதிக்க முடியும். வளரிளம் பருவப் பெண்ணே, உனக்கு தேவை, முதலில் தையல் கலையில் ஆர்வம். அடுத்து புதிய புதிய தையல் கலை நுணுக்கங்களை, தினம் தினம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற தணியாத தாகம். பிறகு, தினம் அந்த நுணுக்கங்களை செயல்படுத்தி, ஆடையை வடிவமைக்கும் தொடர் பயிற்சி. பயிற்சியும் முயற்சியும் இருந்தால் கின்னஸ் சாதனையும் சாத்தியமே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தையல்கலை ஓர் அறிமுகம்.

தையல் இயந்திர பாகங்கள்

தையல் கலைப் பொருட்கள்